×

அசாம் முதல்வர் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால், ஜிதேந்திரசிங் உள்ளிட்டோர் மீது அசாம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. கவ்ரவ் கோகோய், புபேஷ் போரா, தேவவிரத சைக்கியா உள்ளிட்டோர் மீதும் அசாம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவின் பேரில் காங்., தலைவர்கள் மீது அரசியல் வழக்கு போடப்பட்டுள்ளது. அசாமின் குவாஹாத்தி எல்லையில் நடந்த நிகழ்வுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அசாம் முதல்வர் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும் காங் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்

The post அசாம் முதல்வர் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Assam ,Jairam Ramesh ,Delhi ,Congress ,Rahul ,K. C. ,Assam police ,Venugopal ,Jidendrasingh ,Kavrav Kokoi ,Pubesh Bora ,Devviratha Sikia ,Himanta Biswa ,
× RELATED இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக...